Monday, 27 April 2026

புதுவை வெண்முரசு விழா- கடலூர் சீனு.

 

புதுவை வெண்முரசு விழா- கடலூர் சீனு.



இனிய ஜெயம்

கவிஞர் வி.சங்கர் அவர்களுக்கான இந்த வருட வெண்முரசு வாசகர் வட்ட விருது விழா இனிதே நிகழ்ந்து நிறைந்தது

இந்த வருடம் செய்ய வேண்டுவன குறித்த கலந்தாலோசனை கூடுகையின் போது நானும் நண்பர் அரி கிருஷ்ணனும் ஒரே நேரத்தில் இப்படி ஒன்றை செய்யலாம் என்று பேச துவங்கினோம்ஆகவே அதையே முகூர்தமாகக் கொண்டு அடுத்த வருடம் என்று தள்ளிப்போடாமல் உடனடியாக அந்த பணியை துவங்கினோம்.

ஒரு வார இடைவெளி மட்டுமே இருந்ததால் இம்முறைமட்டும் நாங்களே கூடி இந்த எளிய விழா சார்ந்த அனைத்தும் செய்தோம்.  எங்கும் உள்ள வெண்முரசு வாசகர்கள் கூடி புதுச்சேரியில் இதை செய்கிறோம் இதுவே செயல்திட்டம்அடுத்த வருடம் பணிகள் முன்கூட்டியே துவங்கும்எல்லா வெண்முரசு வாசகர்களும் பொருள் உதவி முதல் பிற உதவிகள் வரை அனைத்திலும் இணைந்து செயல்படலாம்.

Screenshot

இம்முறை விழா விஷ்ணுபுரம் கூடுகைகளின் வழக்கம் போல சரியான நேரத்தில் துவங்கியதுவாசகக  நண்பர்களின் பிள்ளைகள் தாளம் இசைக்க குரல் சேர்க்க மங்கல இசையுடன் விழா துவங்கியது.

அரங்கத்தில் ஜெயகாந்தன் பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிறிய அளவிலான உருவப்படம் திறக்கப்பட்டுநிகழ்வு அரங்குக்கு ஜெயகாந்தன் அரங்கம் என்று பெயர் சூட்டப்பெற்றது

வாசகி சித்ரா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவாசகர் சரவணன் நோக்க உரை வழங்கவாசகி பாரதி செந்தூர் அவரது ஐபோனில் ஒளி ஒலி அமைத்து நிகழ்வுகளை படம்பிடிக்க நிகழ்வு துவங்கியது.

சென்னை மயிலாடுதுறை என வெவ்வேறு பகுதியில் இருந்து 35 நண்பர்கள் வாசகர்கள் வரை வந்திருந்தார்கள்வெளியே திடீர் அரசியல் கூட்டம் ஒன்றின் பேரணி மறியல்எங்கும்சாலை பணிகள்விழாவுக்கு வந்த சில நண்பர்கள் இறுதி வரை வெளியே அந்த போக்குவரத்து நெரிசலில் சிக்கி நின்றிருந்ததாக அறிந்தேன்.

Screenshot

முனைவர் மு இளங்கோவன் அவர்கள் விருதினை கையளிக்ககவிஞர் வி.சங்கர் விருதினை பெற்றுக்கொண்டு சிறப்பு செய்தார்.

சூது பவளம் கண்டேன் அல்லேன் நூல் குறித்து அதன் அவந் கார்ட் தன்மை எவ்விதம் மூளையால் வலிந்து செய்யப்படாத இயல்பான படைப்பூக்கம் கொண்டதாக இருக்கிறதுஅது இந்த தொகுப்பின் மொழியில்உணர்வு நிலையில்வெளிப்பாட்டு நிலையில்சாராம்ச நிலையில் என்னவாக இருக்கிறதுஇந்த தொகுப்பின் காண்டம்ப்ரரி தன்மை எத்தகையதுநவீன கவிதை மரபில் இந்த தொகுப்பு சேர்க்கும் தனித்தன்மை என்ன என்பதன் மீது நான் 45 நிமிட மதிப்புரை நிகழ்தினேன்.

Screenshot

வி.சங்கர் அவர்கள் ஏற்புரையில் இந்த தொகுப்புக்கு பின்புலமாக இருந்த விஷயங்களைநன்றி கூறப்பட வேண்டிய கவிஞர்கள் வரிசையை நினைவு கூர்ந்தார்.

கவிதைகள் எவ்விதம் பூமியில் இருந்து வான் நோக்கி விரியும் மலராக இருக்கிறதுஅவை எவ்விதம் வானின் அம்சத்தை பூமிக்கு கொண்டு வருகிறதுகவிஞனாக தான் ஒரே சமயம் வைரங்களை துளைக்கும் வலிமையும் கூர்மையும் கொண்ட நூலாகஅதே சமயம் காம்புகளுக்கு வலிக்காமல் மலர்களை தொடுக்கும் நூலாக உணர்வதை குறித்து பகிர்ந்து கொண்டார்.

Screenshot

விருது தொகையினை மது மஞ்சரி செய்யும் சமூக பணிகளுக்கு கொடையாக அளிப்பதாக ஏற்புரையில் கவிஞர் குறிப்பிட்ட கணம் எனக்கு உள எழுச்சி அளிக்கும் தருணமாக அமைந்ததுஎல்லாவற்றையும் சரிதான் எனும்படிக்கு ஜெயகாந்தன் பார்த்துக்கொண்டிருக்க அவர் முன்னிலையில் இந்த எளிய விழா குறித்த நேரத்தில் சிறப்பாக நிகழ்ந்து நிறைவுற்றது.

கடலூர் சீனு

வெண்முரசு வாசகர் வட்டம் விருது- வி.சங்கர் ஏற்புரை.

வி.சங்கர் பற்றி மதார்.

வி.சங்கர் பேட்டி.

வி.சங்கர்

Saturday, 25 April 2026

கூடுகை 93 இரண்டு அமர்வுகளாக நிகழ்ந்த “விருது மற்றம் மாதாந்திர கூடுகை” குறித்து இராச . மணிமேகலை

 





புதுவை வெண்முரசு வாசகர் வட்டம்  (24.04.26) அன்று நிகழ்த்திய கவிஞர் வி.சங்கர் அவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வும், மாதாந்திர கூடுகை நிகழ்வும் இரு அமர்வுகளாக நண்பர் அரிகிருஷ்ணன் இல்லத்தில் ‘ஜெயகாந்தன் அரங்கில்’ நடைபெற்றது. இதற்கு ‘மண்குழித்து கண்வளர்த்து மஞ்சஞ் சேர்த்த’ பெருமைக்குரியோர் அரிகிருஷ்ணனும், கடலுார் சீனு அவர்களும். .புதுவை வெண்முரசுக் கூடுகை வாசகர்களால் முன்னெடுக்கப்பட்ட நிகழ்வு இது. இரா.விஜயன் வரவேற்புரை நல்கினார். நிகழ்ச்சித் தொகுப்பாளரான சித்ரா விருந்தினர்களை மேடைக்கு அழைத்ததும் சரியாக 5.30 மணிக்கு விழா தொடங்கியது.   முதல் அமர்வில் இசைப்பள்ளி மாணவர்கள் சூர்யா ஸ்ரீ (வாய்ப்பாட்டு), வாசகர் முத்துக்குமரனின் புதல்வர் மு.விவேகானந்தன் (மிருதங்கம்) பண்ணிசையுடன் நிகழ்வு தொடங்கியது


சரவணன் அவர்கள் தன் நோக்கவுரையில் புதுவை வெண்முரசுக் கூடுகையின் பத்தாண்டு


கால வளர்ச்சியையும் 2024ல் திரு.அரிசங்கர் 2025ல் திரு.வளவ.துரையன் ஆகியோர்க்கு கூடுகை சிறப்பு செய்ததையும் நினைவுகூர்ந்தார். விருதாளர் வி. சங்கரையும், அவரது  ‘சூது பவளம் கண்டேன் அல்லேன்’ நுாலையும்  வாசகர்களுக்கு அறிமுகம் செய்தவர், இனி வருங்காலங்களில் கலை, இலக்கிய, பண்பாட்டுத் தளங்களில் மூத்த ஆளுமைகளையும், வளர்ந்து வரும் இளம் ஆளுமைகளையும் சிறப்பு செய்யும் பொருட்டு பாராட்டுப் பத்திரம் மற்றும் இருபத்தைந்தாயிரம் ரொக்க விருது என்று அறிவித்து கூடுகை இன்னும் கொஞ்சம் முன்னேறியுள்ளது’ என்றார். நிதிநல்கிய அமுர்தவல்லி, விஜயன், உள்ளிட்ட  புதுவைக் கூடுகையின்  வாசகர்கள் அனைவருக்கும் கூடுகையின் சார்பாக அன்பையும், நன்றியையும் கூறினார் .மேலும்  ‘படைப்பாளன் வாசகனுக்குத் தரும் படைப்பிற்கும், வாசிப்பின்பத்திற்கும் தன் நன்றியுணர்ச்சியை வெளிப்படுத்தி  சிறப்பு செய்வதே இந்நிகழ்வின் நோக்கம். மேலும் இது படைப்பாளனும் வாசகனும் ஒன்றிணையும் தருணம்!’ என்றார். இக்கவிதைத் தொகுப்பில், தனக்குப் பிடித்த ‘’அம்ம! பைதல் பசுஞ்சுடர்” என்ற கவிதையை ‘மண் குழித்து கண் வளர்த்து மஞ்சஞ் சேர்த்த கதலிக் கன்று பைதல் பசுஞ்சுடர் ஏற்றி வானோக்கியது’ என்று கொண்டுகூட்டி பொருளுரைத்தார். ‘என் முதுகில் முடியடர்ந்த வால் வேண்டும் ஒருமுறையேனும் நானதை ஆட்டிப்பார்க்க வேண்டும்’ ‘நாயே அதைத் தாயேன்’ என்று செல்லங் கொஞ்சினார். மாணிக்கவாசகர்க்கு அடுத்து நாயை பல பாடல்களில் வைத்தவர் இவராகத்தான் இருப்பார் என்று கூறி அவையை நகைப்பிலாழ்த்தினார். ‘சூது பவளமேனி சுடர்ந்தெரியக் கண்டேன்’ என்ற கவிதையின் பொருளாக, அசோகவனத்துச் சீதை, சொல்லின்செல்வன், சீதையின் மனஊஞ்சலை ஆட்டும் இராகவனாகப் புரிந்துகொண்டேன்’ என்றார்

அடுத்து நுால் மதிப்புரையாற்ற வந்தார் எங்கள் கூடுகையின் உரைகாரர்’ கடலுாா் சீனுதமிழின் கலைஇலக்கியம்பண்பாடு எனும் நெடிய மரபில் இக்கவிதைத் தொகுப்பின் பங்களிப்பு என்ன என்பதை பிரஞ்சுப் புரட்சியின் போர் மரபில் வந்த (AVANT GARDE)   என்ற சொல்லாட்சியின் மூலமாக விளக்கினார். வழமையான மரபுகளைக் கட்டுடைத்து புதிய சோதனை முயற்சியில் கருத்துகளை கலைப்படைப்பில் முன்வைப்பவர் என்றும், தமிழில் மரபைக் கட்டுடைத்து ‘சோதிமிக்க நவகவிதை’யைத் தந்த பாரதியை இதன் முன்னோடி எனவும் குறிப்பிட்டார். எது கவிதை என்ற கேள்வி காலந்தோறும் கேட்கப்டுவதையும் காலந்தோறும் விளக்கங்கள் மாறுவதையும் சுட்டினார். கவிதை மொழிக்கு ஆற்றும் பங்களிப்பு, அதற்கும் நிகழ்வாழ்க்கைக்குமான தொடர்பு, அர்த்த சாத்தியங்கள், கற்பனை சாத்தியங்கள், அவை கொடுக்கும் அழகியல், விழுமியங்கள் என்பதை விளக்கி, இரண்டு நிமிட வாழ்க்கை (shorts) வாழ்கிற மனிதரிடையே நீ எப்படி இருக்கிறாய் என்று சொல்வதைவிட உன்னிடம் என்ன இல்லை என்பதைத் தோலுரித்துக் காட்டுகிறது இக்கவிதைத் தொகுப்பு. இரண்டு நிமிடகாலத்தில் உன்னிடம் இல்லாத ஒன்றை உனக்கு நினைவுபடுத்துவதே இக்கவிதைத் தொகுப்பின் நோக்கமாக அமைந்துள்ளது’.




புழங்கு மொழியாக, நாட்டார் மொழியாக, உரைநடைமொழியாக இருக்கும் மொழி, செறிவான கவிதைமொழியாக, இருக்கும் மொழி, குழந்தை மொழியாக ஆவதையும், அம்மொழி அக்கணத்தில் நிகழ்வதை உணர்வுத் தருணமாக ஆக்குவதையும் சுட்டிக்காட்டினார்

 

‘சிமிழ்கணம்

ஒளி பூத்த விதையெல்லாம்

ஓடித் தடுத்து விளைப்பன

வானில் கனிந்து தொங்கும் நான்’

 

‘மண்ணில்

நான் நின்றவிடத்திலிருந்து

வானோக்கி

வன்னஞ் சிலம்பின சிறுநதிக்கூட்டம்’

நாம் பார்க்கும் ஓவியத்திலோ, சிற்பத்திலோ உணரும் காட்சி  இக்கவிதைகளில் உள்ள கவிதைமொழியால் எவ்வாறு அகம் உணரும் தன்மையாகிறது என்றும், தென்பெண்ணையாற்றில் கால் வைத்தால் அந்த நதிநீர் சிதம்பரம் பக்கத்திலோ, கர்நாடகா பக்கத்திலோ கடலில் கலப்பதுபோல வாழ்க்கை என்பது அறுபடாத காலம் போன்றது. அதில் இருக்கிற ஒரு துளியை இக்கவிதை  தொட்டு எடுத்தால் கூட ஒட்டுமொத்த மானுட வாழ்க்கை உய்யும்’ என்றும்,  

‘கவிதையின் அருவமான ஒன்று மொழிவழியாக உணர்வில் கலப்பதை ‘சக்கையாக இனித்துக் கிடந்தது ஓர் உடல்‘ என்ற கவிதை எவ்வாறு தனித்துவமாகச் சொல்கிறது, ‘மேலிருந்து ஆன்டனாவைத் திருப்புவது எப்படி’ என்ற கவிதை, வெளிப்பாட்டுத் தன்மையுடன் fine tune செய்யப்பட்டு அது வாழ்வின் மேன்மைகளையும், அழகுணர்ச்சியையும் வெளிப்படுத்துகிறது. இறுதியாக, கவிதைக்கலையின் உண்மையான சவால் நாம் அனுபவிக்காத எத்தனையோ விஷயங்களை நம் அகம் உணரச் செய்வது. நாம் நம்மை முழுமையாக இழந்து கவிதைக்குள் குதித்தால் மட்டுமே அதனோடு மனம் ஒன்றி பயணிக்கமுடியும்’ என்று உரையை முடித்தார்.

அடுத்து புதுவை காஞ்சி மாமுனிவர் பட்டமேற்படிப்பு மையத்தின் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. இளங்கோவன் அவர்கள் கவிஞருக்கு விருதளித்துப் பாராட்டிப் பேசினார். ‘இன்று நெருங்கிய உறவினரின் திருமணத்திற்குச் செல்ல இருந்தேன். ஜெயமோகனா? திருமணமா? என்றபோது இங்கு வந்துவிட்டேன். இலக்கிய உலகிற்கு எவ்வளவோ செய்திருக்கிறேன். பலரும் கள்ளமௌனம் சாதித்து கடந்து சென்றபோது என் உழைப்பை, பங்களிப்பை உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் ஜெயமோகன் அவர்கள். அவரை வணங்கி மகிழ்கிறேன். ‘சூது பவளம்’ கவிதைத் தொகுப்பை வாசித்தேன். பழந்தமிழ் இலக்கியங்களைப் படித்தவரால்தான் இப்படிப்பட்ட கவிதைகளைத் தரமுடியும். நேரச் சிக்கனம் கருதி எனக்குப்பிடித்த ஒரு கவிதையைச் சொல்கிறேன். 

‘இத்தனை ஆயிரம் நாவுகளால்

நக்கி விடுகிறது மரம்.

துவட்டிக் கொள்ள

மற்றுமொரு மரத்திடம்

ஓடிச் செல்கிறது காற்று’ 

மரபிலும், நவீனத்திலும் ஆழங்காற்பட்டவராலேயே இப்படிப்பட்ட கவிதைகளை எழுத முடியும் என நினைக்கிறேன். இவரை எங்கள் கல்லுாரிக்கு அழைத்து பயன்படுத்திக்கொள்ள விரும்புகிறேன்’ என்று கூறித் தான் தொகுத்த ‘இசைத்தமிழ் கலைஞர்கள்’ எனும் நுாலைப் பரிசளித்தார்.

முதல் அமர்வின் இறுதியாக கவிஞர் வி. சங்கர் தன் ஏற்புரையை (ஜெ.தளத்தில் காண்க) வழங்கினார். தன் உரையில் நிகமானந்தாவின் கனவை நனவாக்கப் பாடுபடும், ஊர்க்கிணறு புணரமைப்பின் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டு வரும் மதுமஞ்சரிக்கு இவ்விருதுத் தொகையை அளிப்பதாக அறிவித்தார். எங்கள் அனைவருக்கும் உளம் நெகிழ்ந்த, உடல் மெய்ப்புக் கொண்ட தருணம் அது! தேநீர் இடைவேளைக்குப் பிறகு இரண்டாம் அமர்வு தொடங்கியது.

 



இரண்டாம் அமர்வில் பன்னிரு படைக்களத்தின் பேசுபகுதி ‘ஆவணி’ முதன்மைப் பேச்சாளர் சிலம்பரசன். அவரை அடுத்து மற்ற நால்வரும் பேசியதும் கவிஞர் தானும் ஒரு வெண்முரசு வாசகனாக பேச விழைந்தார். தன் பேச்சில், ‘வெண்முரசு இந்திய மலைத்தொடருக்கு நிகரானது. வேதாந்த மையம் கொண்டது. என் நண்பர்கள் ‘நீ ஒரு கவிஞன். கவிமனம் கொண்ட ஒருவன் ஏன் எப்பவும் ஜெயமோகன் மாதிரியான காவியகர்த்தனிடம் போக வேண்டும்?’ என்றார்கள். நான் பொன் கீரி கதையைக் கூறி ‘தயைக்காக’ என்றேன். வேதாந்தம் என்று சொல்லக்கூடிய மணிமுடி ஒரு தயை. அதை தரிசிக்க வேண்டுமென்றால் ஒருவன் அந்த காவியகர்த்தன் முன் அமரவேண்டியிருக்கும். நான் வெண்முரசு வழியாகக் கண்டு கொண்டது அதைத்தான். அந்த தயை நம்மைக் காக்கட்டும்!’ என்று உரையை முடித்தார். என்னுடனான தனிப்பேச்சில் “ஆதிகாலத்தில் மனிதர்கள் ஒன்றுகூடி நெருப்புமூட்டி தோளோடு தோள் சேர்த்து பாட்டுப்பாடி மகிழ்ந்தனர். இன்று வெண்முரசு என்ற காவியத்தின் பொருட்டு அனைவரும் கூடி தோளோடு தோள் நின்று கொண்டாட்டமாக இதை நிகழ்த்தும்போது அது நினைவுக்கு வருகிறது. மையம்தான் மாறியிருக்கிறது, மனநிலை ஒன்றுதானே! இங்கு ஒவ்வொருவரும் ‘நான் துரியோதனன் ஆள், நான் கர்ணன் ஆள்’ என்று பேசுவதைக் கேட்கும்போது கூடுகையில் மட்டுமன்றி வீட்டிலும் அவர்களுடன்தான் வாழ்க்கை போலிருக்கிறது” என்றார்.  இறுதியாக முத்துக்குமரன் நன்றி நவின்றார் 5.30க்கு துவங்கிய விழா 10 மணிக்கு நிறைவுற்றது.

இரவு வீட்டுக்கு வந்தும் மனம் அலையடித்துக் கொண்டிருந்தது. படுத்தால் துாக்கம் வரவில்லை. கவிஞரின் கவிதைத் தொகுப்பைப் புரட்டினேன். 

‘குறுந்தொகையோ! கண்டேன் அல்லேன்!

மாணிக்கவாசகமோ! கண்டேன் அல்லேன்!

பிள்ளைத்தமிழோ! கண்டேன் அல்லேன்!

ஆண்டாள் பாசுரமோ! கண்டேன் அல்லேன்!

பாரதியோ! கண்டேன் அல்லேன்!

நீலமோ! கண்டேன் அல்லேன்!’ 

அதுவா இதுவா?

இதுவா அதுவா?

எதுதான் இது?!

என்று என் மதி மயங்கியது. நேரம் இரவு 1 மணி!

வாசிப்பு ஒரு வேள்வி. அரிகிருஷ்ணன் அவர்கள் அவ்வேள்வியின்  மையவிசையாக நின்று அனைவரையும் ஒருங்கிணைத்து திட்டமிட்டு பொறுப்புகளைப் பகிர்ந்து கொடுத்தார். செயல்வீரர்களாகிய நாங்கள் தான் அவரது பலம். திட்டமிடலும் நேர மேலாண்மையும் அவரது சிறப்புப் பண்புகள். அனைவரது கூட்டுமுயற்சியாலும் விருது விழா சிறப்பாக நடந்து முடிந்தது. 

இளைய யாதவர் திரௌபதியிடம் “நமக்கு கொண்டாட்டங்கள் தேவைப்படுகின்றன அரசி! செல்வம் என்பது எதை வாங்குகிறதோ அதனால் தன்பொருள் கொள்வது” என்றார் – வெண்முரசு

 

  இராச. மணிமேகலை

 


Friday, 24 April 2026

வெண்முரசு வாசகர் வட்டம் விருது- வி.சங்கர் ஏற்புரை.

 

வெண்முரசு வாசகர் வட்டம் விருது- வி.சங்கர் ஏற்புரை.


மேடையிலும் அரங்கிலும் அமர்ந்திருக்கும் நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்இயல்பிலேயே கூட்டத்தின் மத்தியில் பேசுவது எனக்கு  கூச்சமளிக்கக் கூடியதுஆனால் பழகியவர்களுடன் பேசுவதில் எனக்கு தடையேதும் நேர்வதில்லைஇங்கு என்னை பற்றிய அறிமுக உரையையும் என் கவிதைகளைப் பற்றிய தன் வாசிப்பையும் பகிர்ந்து கொண்ட சரவணன் இந்த விருது கூடுகையை எனக்கு அன்னியமல்லாததாக ஆக்கியிருக்கிறார்

இங்கு வருவதற்கு இரண்டு நாட்கள் முன்பு  கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது நிகமானந்தா நினைவுக்கு வந்தார்கங்கை கரையை ஒட்டிய சுரங்க நடவடிக்கைகளை தடை செய்யக் கோரி கங்கையை தூய்மையாக்குவதற்காக 115 நாட்கள் உண்ணா நோன்பிருந்து தன் 34 வயதில் உயிர் துறந்தவர்.  விருது அறிவிக்கப் பட்டதும் அதை தாள வலுவில்லாத என் சிறு தோள்களில் அதன் எடையை உணர்ந்தேன்.  நிகமானந்தாவின் நினைவை பணிந்து ஊர் கிணறு புணரமைப்பில் செயல் பட்டுவரும் மது மஞ்சரிக்கு இந்த விருது தொகையை முழுக்க அளிப்பதன் வழியாக என்னிலிருந்த பதட்டம் கழிந்ததுஅவர் அதை ஏற்றுக் கொண்டு என்னை கௌரவமும் நிறைவும் சேரும்படி செய்திருக்கிறார்


 

வெண்முரசு வாசகர் வட்டம் விருது 2026

இது என் வழியாக நிகழ்ந்த கவிதைகளுக்கு அளிக்கப்பட்ட விருது என்பதை உணர்கிறேன்ஆனால் இக்கவிதைகளை எழுதியவனின் உடன் மிக நீண்ட நேரத்தை செலவிட வாய்த்தவன் என்ற தகுதியால் இந்த விருதை ஏற்கும் தகுதி எனக்கு உண்டு என நினைக்கிறேன்வெண்முரசு வாசகர்களால் அளிக்கப்படும் இந்த விருதை நான் உண்மையான நிறைவுடன் ஏற்றுக் கொள்கிறேன்ஏனெனில் வெண்முரசு வெளியான போது அதை நாளும் ஒரு அத்தியாயம் என வாசித்த நானும் வெண்முரசு வாசகனே

சூது பவளம் கண்டேன் அல்லேன்

சூது பவளம் கண்டேன் அல்லேன் உருவானதில் நான் இருவருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்வெறும் A4 தாள்களில் அச்செடுக்க பட்டிருந்த வரிகளை கவிதை என அடையாளம் கண்டவர் லக்ஷ்மி மணிவண்ணன்பதிப்பகங்களில் பதிப்பிக்க முயன்று முடியாமலான போது இந்நூலை தானே பதிப்பித்தவர்எனக்கு முன்பே மதார் ஆனந்த குமார் போன்றோரின் நூலை தொகுக்கவும் அந்நூலை சரியாக அடையாளப் படுத்தவும் செய்தவர்அவருக்கு என் வணக்கம்இனி எனக்கு பிறகு வரப்போகும் கவிஞர்களுக்கும் அவர் இதை செய்வார் என்பது உறுதி

தொடர்ந்து தீவிர இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு வாசித்து ஒரு எழுத்தாளனாக இன்று நான் இந்த மேடையில் நிற்பதற்கு காரணமான ஜெயமோகன் அவர்களுக்கு என் வணக்கம்

நண்பர்கள் ஞானசேகரன்அருண்மொழிவேல் முருகன்சசி ஆகியோரை நினைத்துக்கொள்கிறேன்நண்பர்களான மனைவி சந்திரிகாவையும் மகள் இசை வல்லபியையும் நினைத்துக் கொள்கிறேன்உடன் இருந்த இவர்களுக்கு என் நன்றி

கவிதையை பற்றிய என் நோக்கை சொல்லி உரையை தொடங்கலாம் என நினைக்கிறேன்என்(wordpress) இணையதளத்தில் கவிதைகளை பதிவேற்றம் செய்ய அவர்கள் அமைத்திருக்கும் குறிசின்னம்(icon) என்பது இறகுமேலும் கவிதை சார்ந்த நிறைய இணையதளங்களின் முகப்பு அடையாளமாக இறகு பயன்படுத்தப்பட்டிருப்பதை கண்டிருக்கிறேன்.  நவீன எழுத்து கருவிகள் வந்த பின்னும் எதனால் இன்றும் இறகு கவித்துவத்தின் சின்னமாக ஏற்றுக் கொள்ள படுகிறதுஇறகுகளை எழுதப் பயன்படுத்திய அந்த பழந்தன்மையை நினைவு கொள்ளும் பொருட்டாஅப்படியும் இல்லை.  ஏனென்றால் இறகுக்கு முன்பே சிறிய மூங்கில் தண்டுகளை நுனியில் சீவி எழுது கோலாக பயன்படுத்திய பிறகே நாம் இறகுகளை  எழுதக் பயன்படுத்தும் முறையை கண்டு கொண்டோம்

இங்கு கவிஞர் உமா மகேஸ்வரியின் ஒரு கவிதை வரியை நினைவு கூறுகிறேன். ‘தனித்த பேச்சாக தன் வாசனையைப் பரப்பும் மலர்’. தனித்து ஒரு வாசனையை பரப்பும் இந்த மலர் தன்மையை நாம்  கவிதைகளுக்கும் உதாரணமாக சொல்ல முடியும்.

நண்பர்களே இறகு என்பது ஒரு மலர்.  இறகு ஒரு பறவையின் உடம்பிலிருக்கும் வரை மட்டுமே அது பயன்பாடு சார்ந்ததுபறவையின் எடையை சுமந்து மேலேற வேண்டிய நோக்கம் கொண்டதுவானில் உதிர்ந்த கணம் அது மலரென்றாகிறதுஉதிர்ந்த பிறகே பூக்கும் மலர் அது

இறகைப் போலவே கவிதை வானோக்கி தன்னை திறந்து கொண்ட  மலர்பறவை என்பது ஒரு அழகிய மலர்க்கூட்டம்பறவையைப் போல கவிதையை இந்த மொத்த பூமியும் அந்த ஆகாசம் நோக்கி தங்கள் தோள்களிலிருந்து எழ செய்கிறது.  பரந்த வெளியில் தான் பூத்த பிறகு கவிதை உலகிற்காக கனிந்து மீண்டும் மண்ணுக்கு வருகிறது

இமைக்கணத்தில் ஆகாயத்தின் உயரத்தில் சென்று முயன்ற ஆயிரம் பேர்களில் ஒருவருக்கே மெய்மை எட்டுகிறது என்ற வரி உண்டுகவிதை அப்படி அமைந்த ஒரு இறகு போல நமக்காக மண்ணில் இறங்கி வருகிறது

பூத்தொடுத்தல் என்ற உமா மகேஸ்வரி யின் மற்றொரு கவிதையும் நினைவுக்கு வருகிறது

இந்தப் பூவை

எப்படித் தொடுக்க நான்

ஒருவேளை,

என் மனமே நூலாகும்

நுண்மையுற்றாலொழிய.

மனமே நூலாகும் நுண்மை கொண்டதே கவித்துவம்வாழ்நாள் முழுக்க பூக்கொய்து மாலை தொடுக்கும் வாழ்க்கையே எனக்கு இப்பிறவில் அமைந்தது.முடிவிலியாக நீண்டு கிடக்கும் காலத்தின் இரு முனைகளும் சரியாக முடிச்சிட்டு யாக்கும் அழகிய மாலைஆனால் பூத்தொடுத்து பூத்தொடுத்து நிறையாமல் அந்த நூலே மலராகும் நுண்மை நிகழ்வதே அருள் என்றால் அது என் தலைமேல் அமைக

மலையாள கவிஞர் அக்கித்தம் அச்சுதன் நம்பூதிரி யின் கவிதை வரி

வைரங்கள் துளைத்திடும் 

அருமணிகளினூடே கடந்து செல்கிறேன்

என் அதிர்ஷ்டம் 

நான் வெறும் நூல் தான்

வைரங்கள் தேவையிலாது தன் நுனிக் கூர்மையினால் நுண்மையினால் அருமணிகளை கோக்க வல்லது அந்த நூல்ஒரு கணம் பூத்தொடுக்கவும் மறுகணம் அருமணிகளை துளைத்து கோர்க்கவும் முடிந்த நுண்மையான நூலே கவித்துவ மனம்அதை வணங்குகிறேன்அதை அருளிய வாக்தேவிக்குஎன் இறைக்கு நன்றி

இறுதியாக நான் இந்த மேடையில் இருக்கும் மனநிலையை சரியாக சொல்லும் மலையாள கவிஞர் ராமபுரத்து வாரியரின் கவிதை வரியுடன் முடித்துக் கொள்கிறேன்

வறியவனில் வறியவன் என்பதால்

தாழ்ந்தவனில் தாழ்ந்தவன் என்பதால்

ஞானமும் இல்லாததால்

எனக்கு இறைவன் தானே வந்து துணை நிற்கிறான்

அதனால் நான் இந்த பாடலைப் பாடுகிறேன்

நான் இல்லாமல் இது முழுமையுறாது என்பது உறுதி

கொடையாகவே பெற்றீர்கள் கொடையாகவே அளியுங்கள்’ என்பது பைபிள் வரிஇங்கு எதையேனும் நான் அளித்திருந்தால் அதையும் கொடையாகவே பெற்றேன் என்று கொள்கநன்றி

வெண்முரசு கூடுகை93 மற்றும் வெண்முரசு வாசகர் வட்ட விருது 2026 நிகழ்வின் சில உச்ச தருணங்கள்